Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார்.
இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சூர்யா பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது தாய் ஜெயா மகனை கண்டித்தார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சூர்யா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் குதித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெயா மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் தத்தளித்தார். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் குதித்து ஜெயாவை மீட்டனர்.
ஆனால் சூர்யா பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலறிந்ததும் காங்கயம் போலீசார் விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் இருந்த ஜெயா காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்க்கும், மகனுக்கும் எதற்காக தகராறு நடந்தது? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment