Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சாம்பவலசை சேர்ந்தவர் செல்வன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜெயா (40). இவர்களுக்கு சூர்யா (15) என்ற மகன் உள்ளார்.
இவர் அருகிலுள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற சூர்யா பள்ளி முடிந்து வீடு திரும்பினார்.
அப்போது தாய் ஜெயா மகனை கண்டித்தார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சூர்யா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் குதித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் ஜெயா மகனை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் தத்தளித்தார். ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் குதித்து ஜெயாவை மீட்டனர்.
ஆனால் சூர்யா பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த தகவலறிந்ததும் காங்கயம் போலீசார் விரைந்து வந்து சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மயக்க நிலையில் இருந்த ஜெயா காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்க்கும், மகனுக்கும் எதற்காக தகராறு நடந்தது? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment