Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
புவனேஸ்வரியின் தம்பி மதன்குமார் அதே பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பினார். வேலைக்கு சென்ற பெற்றோரும், டியூசனுக்கு சென்ற தம்பியும் வீடு திருமப்பவில்லை.
வீட்டில் தனியே இருந்த புவனேஸ்வரி திடீரென்று வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணாது திடுக்கிட்டனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. புவனேஸ்வரி கரிக்கட்டையாய் கிடப்பதைப்பார்த்து அலறி துடித்தனர்.
சம்பவம் குறித்து ஊதியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் மாணவி ஏதும் கடிதம் எழுதி வைத்து இருக்கிறாரா? என்று சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் கடிதத்தில் மாணவி எழுதிய தகவலை தெரிவிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரை முற்றுகையிட்டு புவனேஸ்வரி கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறாள் என்று கூறவேண்டும். அதன் அடிப்படையிலேயே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கண்டிப்பாக கடிதத்தின் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
மாணவி தீக்குளித்து இறந்த சம்பவத்தையொட்டி அவர் படித்த பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த ஏதேனும் சம்பவம் காரணமாக மாணவி தற்கொலை செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...

0 comments:
Post a Comment