Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
புவனேஸ்வரியின் தம்பி மதன்குமார் அதே பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பினார். வேலைக்கு சென்ற பெற்றோரும், டியூசனுக்கு சென்ற தம்பியும் வீடு திருமப்பவில்லை.
வீட்டில் தனியே இருந்த புவனேஸ்வரி திடீரென்று வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணாது திடுக்கிட்டனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. புவனேஸ்வரி கரிக்கட்டையாய் கிடப்பதைப்பார்த்து அலறி துடித்தனர்.
சம்பவம் குறித்து ஊதியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் மாணவி ஏதும் கடிதம் எழுதி வைத்து இருக்கிறாரா? என்று சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் கடிதத்தில் மாணவி எழுதிய தகவலை தெரிவிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரை முற்றுகையிட்டு புவனேஸ்வரி கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறாள் என்று கூறவேண்டும். அதன் அடிப்படையிலேயே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கண்டிப்பாக கடிதத்தின் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
மாணவி தீக்குளித்து இறந்த சம்பவத்தையொட்டி அவர் படித்த பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த ஏதேனும் சம்பவம் காரணமாக மாணவி தற்கொலை செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment