Thursday, September 11, 2014
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ்(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 மாத காலமாக சந்தோஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் தலைவலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சந்தோசின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தோஷ் தற்கொலை செய்யும் முன்பு வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அப்பா என்னை மன்னித்து விடுங்கள். இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன். என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. எந்த சிகிச்சை பெற்றாலும் எனக்கு வந்துள்ள தலைவலி குணமாக வாய்ப்பில்லை. எனவே என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சந்தோசின் உடலைப் பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
0 comments:
Post a Comment