Thursday, September 11, 2014
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ்(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 மாத காலமாக சந்தோஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் தலைவலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சந்தோசின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தோஷ் தற்கொலை செய்யும் முன்பு வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அப்பா என்னை மன்னித்து விடுங்கள். இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன். என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. எந்த சிகிச்சை பெற்றாலும் எனக்கு வந்துள்ள தலைவலி குணமாக வாய்ப்பில்லை. எனவே என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சந்தோசின் உடலைப் பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...

0 comments:
Post a Comment