Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது அமராவதி. இங்குள்ள பொதுமக்கள் இன்று அதிகாலை தங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக உலா வருவதைப் பார்த்தனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
0 comments:
Post a Comment