Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ளது அமராவதி. இங்குள்ள பொதுமக்கள் இன்று அதிகாலை தங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையின் குறுக்கே அங்கும் இங்குமாக உலா வருவதைப் பார்த்தனர்.
வெலவெலத்துப்போன அவர்கள் வீட்டுக்குள் போய் முடங்கினர். பின்னர் அமராவதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மறு நிமிடமே வனரேஞ்சர் மாரியப்பன் மற்றும் வன அலுவலர்கள், வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் கூறிய பகுதிகளில் அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.
பொதுமக்களை மிரள வைத்த சிறுத்தைப்புலி சிக்கவில்லை. அமராவதி நகர் குடியிருப்பை சுற்றி ஏராளமான புதர்கள் உள்ளன. அதில்தான் அந்த சிறுத்தைப்புலி பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக் கிறார்கள்.
சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப்பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தனியாக பொதுமக்கள் நடமாட வேண்டாம் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமராவதி பகுதியில் தான் ராணுவத்தினர் நடத்தும் சைனிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் யாரும் தனியே வெளியே வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தைப்புலி பிடி பட்டால்தான் தங்களுக்கு நிம்மதி என்று அமராவதி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment