Tuesday, August 25, 2015

On Tuesday, August 25, 2015 by Unknown in ,    

விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்டித்து அங்கு மறியல் நடந்தது.மறியலில்  இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹங்கீர் மற்றும் மாவட்ட தலைவர் செய்யது ஜஹீர் உசேன் கலந்து கொண்டனர்  இந்நிலையில் சம்பந்தப்பட்டநபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அபுதாகிர் தலைமையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., முத்துக்குமரனிடம் மனு அளிக்கப்பட்டது. இதே மனுவை மகேஷ்ரவன் எஸ்.பி.,யிடமும் அளித்தனர்.

0 comments: