Tuesday, August 25, 2015
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், நடுஞ்சூரங்குடி உட்பட 8 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
தொகுதியில் ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே சாத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 2–ம் கட்டமாக இந்த முகாம் நடைபெற்று வருகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். தமிழக முதல்வரின் சரித்திர சாதனை திட்டங்கள்தான், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை பெற்று தந்தது.
குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் சரித்திர வெற்றியை பெற்றுள்ளார். தமிழக மக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வருகின்றனர். அண்ணா காலத்தில் அண்ணன் தம்பி உறவு கட்சியினர் மத்தியில் நிலவியது. தற்போது தமிழக முதல்வர் அம்மா ஆட்சி காலத்தில் தெய்வம்–பக்தர்கள் கொண்ட உறவாக அ.தி.மு.க. திகழ்கின்றது. ஐந்தரை கோடி மக்கள் தெய்வமாக வணங்கும் தமிழர் குல சாமியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்சியளிக்கின்றார்.
இன்று முகவரி இல்லாத, அரசியலில் அநாதையாக்கப்பட்ட இளங்கோவன் தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரித்திர சாதனைகளை படைத்து வரும் தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
யூனியன் தலைவர் வேலாயுதம், நகராட்சி தலைவர் டெய்சிராணி, ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாணவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் வாசன், வக்கீல் பாஸ்கரன், தொகுதி செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் முனிஸ், வெம்பக்கோட்டை இளைஞரணி ஒன்றிய செயலாளர் காசித்துரைப் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment