Showing posts with label virudhunagar. Show all posts
Showing posts with label virudhunagar. Show all posts

Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வருகிறது: ஸ்டாலின் பேச்சு
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விருதுநகர் வந்தார். விருதுநகர் மெயின் பஜாரில் வியாபாரிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட அவர், மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது, ஹஜ் பயண நெரிசலில் 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தி ரோட்டில் உள்ள 2 திருமண அரங்குகளில், ஓய்வூதியம் பெறுவோர், முதியோர், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் நகர் பிரமுகர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். வரி விதிப்பு முறையில் மாற்றம், விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரெயில்வே மேம்பாலம், இலவச திட்டங்களுக்கு பதிலாக நலத்திட்ட உதவிகள், பூரண மதுவிலக்கு, தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குதல், தி.மு.க.வில் பல்வேறு அணிகளை வலுப்படுத்துதல், முதல்அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, தி.மு.க.வினர் செயல்பாட்டில் மாற்றம் ஆகியவற்றை பற்றிய கருத்துகள் கூறப்பட்டன. பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன. அப்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–
இங்கு பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. இங்கு பேசிய சகோதரி தி.மு.க. தொடங்கிய போது இருந்த கொள்கைப் பிடிப்பு தற்போது பின் நோக்கிச் செல்வதாக குறிப்பிட்டார். கால மாற்றங்கள் ஏற்படும் போது வளர்ச்சியும் ஏற்படும். தெருக்கூத்து நடந்த காலம் உண்டு. நாடகம் வந்தபோது தெருக்கூத்து மறைந்து விட்டது. சினிமா வந்தபோது, நாடகம் இல்லாமல் போய்விட்டது. தற்போது சி.டி. வந்தபின்பு சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. கால மாற்றத்தினால் வளர்ச்சி ஏற்பட்டாலும் கொள்கைப் பிடிப்பில் இருந்து பின்வாங்கக் கூடாது. இதேபோன்று தி.மு.க.வினர் பதவிக்கு வந்தாலும் அதனை பொறுப்பு என உணர்ந்து செயல்பட வேண்டும்.
நான் துணை முதல்வராக இருந்தபோது தொழில் துறையையும் கவனித்து வந்தேன். அப்போது தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்காக தொழில் அதிபர்களையும் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேசினேன். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க திட்டமிட்டு செயல்படுத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தென் மண்டலம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் சென்று மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். தற்போது நீங்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களையும் நான் சென்னைக்கு கொண்டு செல்கிறேன். இவற்றை எல்லாம் இணைத்து தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் போலீஸ் துறையில் 216 பேர் தற்கொலை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரி விஸ்ணு பிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க கேட்டதற்கு யாரையோ காப்பாற்றுவதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதும் என்கிறார். சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடுக்கடுக்கான பொய்களை கூறி வருகிறார்.
On Friday, September 25, 2015 by Unknown in ,    
விருதுநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர்.
 முஸ்லிம் மக்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், விருதுநகரிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
 பின்னர் பெரியபள்ளிவாசலில் ஜமாத் தலைவர் முகமது எகியாகான் தலைமையிலும், செயலாளர் ராஜஉசேன் முன்னிலையிலும் இமாம் சேக்முகமது வழிகாட்டுதலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தியாக திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
 இதேபோல், விருதுநகர் சின்னபள்ளிவாசலில் இமாம் சார்நவாஷ்கான் தலைமையிலும், கல்பள்ளிவாசலில் இமாம் அப்துல்கரீம் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  விருதுநகர் ஆர்.ஆர்.நகர், ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Wednesday, September 23, 2015

On Wednesday, September 23, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்: பட்டாசு தொழிலாளர்களை சந்திக்கிறார்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் என்ற சுற்றுப்பயண திட்டத்தின்கீழ் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்புக்கு வருகிறார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சேத்தூரில் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர் இரவு ராஜபாளையத்தில் தங்குகிறார்.
நாளை (24–ந்தேதி) காலை 8 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடரும் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் வனவிலங்கு மீட்பு மையத்தை பார்வையிருகிறார். பின்னர் காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள நூற்பு ஆலைக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசுகிறார்.
காலை 9.55 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு பால் உற்பத்தியாளர்களையும், நெசவாளர்களையும் சந்திக்கின்றார். 11.45 மணிக்கு சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களையும், 12 மணிக்கு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
1 மணிக்கு சாத்தூர் வரும் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணன்கோவிலில் இருந்து முக்குராந்தல் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் தீப்பெட்டி, பட்டாசு, பேனா நிப் தயாரிக்கும் தொழிலாளர்களுடன் சாப்பிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மதியம் ஆர்.ஆர். நகரில் ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு விருதுநகர் வரும் மு.க.ஸ்டாலின் அங்கு டீக்கடையில் தேநீர் அருந்துகிறார். 4.30 மணிக்கு கந்தசாமி–ராஜம்மாள் மண்டபத்தில் மூத்த குடி மக்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்களிடம் பேசுகிறார். 5.30 மணிக்கு எஸ்.எஸ்.கே. மண்டலத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
6.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும், 8 மணிக்கு கல்குறிச்சியிலும் 9 மணிக்கு காரியாபட்டியில் பொதுமக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
On Wednesday, September 23, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டை மற்றும் பந்தல்குடி அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் பரிசுப்பெட்டகம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் தாய்மார்களிடம் பரிசுப்பெட்டகத்தை வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினார். உடன் அதிமுக தொகுதிச்செயலாளர் முத்துராஜா,ஒன்றிய துணைத் தலைவர் கொப்பையராஜ், விருதுநகர் ஒன்றியச் செலாளர் மூக்கையா, பேரவைச் செயலாளர சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்

Monday, September 21, 2015

On Monday, September 21, 2015 by Unknown in ,    
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் மானிய உதவித்தொகையைப் பெறும் விதமாக கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் 66 கைத்தறி நெசவாளர்களுக்கான கடன் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அண்ணா நெசவாளர் சங்க அமைப்புத் தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் வீரகணேசன், மலைராஜன், தொகுதிச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Monday, September 14, 2015

On Monday, September 14, 2015 by Unknown in ,    
ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் விஷன்–2020 அமைப்பின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறைந்த அப்துல்கலாம் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள லட்சிய இந்திய இயக்கத்திற்கான முத்திரை மற்றும் இயக்க கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.
லட்சிய இந்திய இயக்கத்தின் கொடியை அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஏற்றி வைத்து அப்துல்கலாமின் பத்து கட்டளைகளையும் முன்மொழிந்தார். விஷன்–2020–ன் தலைவர் திருச்செந்தூரான் பேசினார்.
இதை தொடர்ந்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசும்போது லட்சிய இந்திய இயக்கம் குறித்து கிராமங்களிலும், நகர பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் மாணவ– மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. நேர்மையாக உழைப்போம், உண்மையாக வெற்றி பெறுவோம். தன்னம் பிக்கையும், துணிச்சலும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
ஊருணிக்கு உயிர் கொடுப்போம். தமிழகத்தில் 44 ஆயிரம் ஊருணியை காப்பாற்றுவோம் என்றார். தமிழகத்தில் இருந்து 9 மாவட்ட கல்லூரி மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பலராம்ராஜா செய்திருந்தார்.
On Monday, September 14, 2015 by Unknown in ,    
காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டியைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு, நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானிய வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர், முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரிய கண்மாய் மூலம் நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது.
இந்த கண்மாய்கள் நிறைந்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல் விளைச்சல் இருக்கும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை பொய்த்திருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இத்துடன், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வரத்துக் கால்வாய்கள் தூர்வாராததால் தூர்ந்துபோயும் உள்ளதால், மழைநீரை சேமித்து விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், பெரும்பாலான விளைநிலங்கள் மனையடிகளாக மாறியுள்ளன.
எனவே, இந்தப் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த கம்பிக்குடி-சென்னம்பட்டி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி திட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கர் கூறியது: கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்ததால் விளைச்சல் சரிவர இல்லை. கிணற்றுப் பாசனம் உள்ளவர்களும் நிலத்தடி நீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், பொருள்களை விளைவிக்க முடியாமலும் நஷ்டப்பட்டு வருகிறோம்.
இந்தாண்டு மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், மழை நீரை சேமிப்பது கடினமே. எனவே, கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்

Saturday, August 29, 2015

On Saturday, August 29, 2015 by Unknown in ,    



On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி (36). இவரது மகள் செல்வி (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது.). இவருக்கு திருமணம் முடிக்க நினைத்த பெற்றோர் வரன் தேடி வந்தனர். திருமணம் தள்ளிப்போவதாக வருத்தமடைந்த சாந்தி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜோதிடர் சிவசுப்பிரமணியனிடம் மகள் ஜாதகத்தை கொடுத்தார். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், ‘செல்விக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்’ என்று கூறினார். பரிகாரத்தையும் தானே செய்வதாக கூறி தனது மகன் முத்து மாரீஸ்வரன், செல்விக்கு தாலிகட்டி, ஒருநாள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் தோஷம் சரியாகிவிடும் என்று கூறினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் செல்விக்கு முத்துமாரீஸ்வரன் தாலி கட்டினார். 

இருவரும் ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது, சிவசுப்பிரமணியன், செல்வியிடம் தனது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் அழைக்க வந்த தனது தாயுடன் செல்ல செல்வி மறுத்து விட்டார். இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் சாந்தி கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்தார். மைனர் பெண்ணாக இருந்ததால் திருமணம் செல்லாது என கூறிய ஐகோர்ட் கிளை, தாய் சாந்தியுடன் செல்வி செல்ல உத்தரவிட்டது. இதன்படி செல்வியும், தாயாருடன் சென்றுவிட்டார். 

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஜோதிடர் சிவசுப்பிரமணியன், அவரது மகன் முத்துமாரீஸ்வரன், உறவினர் வைத்தியலிங்கம் 3 பேரும் சாந்தி வீட்டிற்கு வந்து சாந்தியின் தாய் முத்துலட்சுமியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த செல்வியை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்
On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகரில் குற்றங்களை தடுப்பது குறித்து தென்மண்டல ஐ.ஜி. ஆய்வுதென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தென் மாவட்டங்களில் அவ்வப்போது ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
போலீஸ் நிலையங்களில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதே ஆய்வு பணி நேற்றும் நடந்தது. மாவட்ட அளவில் குற்றங்களை குறைப்பதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதற்கான முயற்சிகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்கள், நில மோசடி வழக்குகள், குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை? மற்றும் போக்குவரத்து விதிமீறல் பற்றிய வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி மற்றும் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
On Saturday, August 29, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில், நாட்டுக்கோழிப்பண்ணைகள் அமைக்க தொழில்முனைவோர், விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு இறைச்சிக் கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நிகழாண்டில் நாட்டுக் கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த மூலதனமான ரூ.1.29 லட்சம் செலவில் 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம் உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் கொட்டகை அமைக்க 25 சதவீதம் மானியம் அளிக்கப்படும். இதை பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ பண்ணை அமைத்து பயனடையலாம். ஏற்கனவே, இத்திட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பில் பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் பயன்பெற இயலாது.
இதில், விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள், கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Friday, August 28, 2015

On Friday, August 28, 2015 by Unknown in ,    

On Friday, August 28, 2015 by Unknown in ,    
On Friday, August 28, 2015 by Unknown in ,    
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 இதில் சிறப்பிடம் பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என   அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் எந்நேரமும் பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்துவதால் மன இறுக்கத்திற்கு ஆளாகும் நிலையுள்ளது. எனவே பள்ளிகளில் மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த மாணவ, மாணவிகள் தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9,10,11,12 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கலை விழா போட்டி நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 இசை, நாடகம், நடனம் மற்றும் காண் கலைகளான பரிமான கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், இரு மற்றும் முப்பரிமான ஓவியங்கள், பொம்மைகள், கைவினை பொருள்கள் மற்றும் சுடுமண் பொருள்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கலைவிழா போட்டிகள் 3 கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. கல்வி மாவட்ட அளவில் செப்.30 ஆம் தேதிக்குள்ளும், மாவட்ட அளவில் அக்.15-ஆம் தேதிக்குள்ளும், மாநில அளவில் நவ.15-ஆம் தேதிக்குள்ளும் நடத்தப்பட இருக்கிறது.
 அதற்கு முன்னதாக திருச்சியில் தெப்பக்குளம் பிஷப் ஹூபர் மேல்நிலைப்பள்ளி பயிற்சி வளாகத்தில் இப்போட்டிகள் நடத்துவது தொடர்பாக வருகிற செப்.9ஆம் தேதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    இதில், கலை ஆர்வம் உள்ள நேர்முக உதவியாளர், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர், இசை ஆசிரியர், ஓவியர் ஆசிரியர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
 இதை இடைநிலை கல்வி இயக்கம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 கலை பற்றிய முழு தகவல் சேகரிப்புக்கு-30, இசை-10, மேடை அலங்காரம்-10, உடைகள் ஒப்பனைகள்-10, சிறப்பாக நடிக்கும் மாற்றுதிறனாளி-15, உணர்ச்சி மிக்க நடிப்புக்கு-25 என மதிப்பெண்கள் அளிக்கப்பட இருக்கிறது.  
 இதில், கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர், மாவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலும் பங்கேற்பர்.  அதையடுத்து மாநில அளவில் வெற்றி பெறுவோர் தேசிய அளவில் புதுதில்லியில் பாலபவர் அரங்கத்தில் டிச.8ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதில், சிறப்பிடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு டிச.11-ஆம் தேதி அதே அரங்கத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
  அதில், முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2-ஆம் பரிசாக ரூ.3 லட்சமும், 3-ஆம் பரிசாக ரூ.2 லட்சமும் அளிக்கப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் விருது பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை விழா கன்னாட்பிளேஸ் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
  கிராமங்களில் அழிந்து வரும் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்திலேயே மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இப்போட்டிகளை நடத்துகிறது.
On Friday, August 28, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாரமன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இப்பகுதியில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
     விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.    விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்.  இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வம்,  வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஜோசப் மரியரெக்ஸ், துணை வேளாண்மை அலுவலர் குருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Friday, August 28, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளது இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரமான முறையிலும், மலிவு விலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி சாம்பாரும், 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பில்லை சாதம் ஆகியவை மகளிர் குழுக்களால் சுகாதாரமான முறையில் தயார் செய்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சியில் பஜார், தலைமை மருத்துவமனை  வளாகம், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளில் 8 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இந்த உணவகம் தொடங்கப்பட்ட 97 நாள்களில் ரூ.27.07 லட்சத்திற்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 25, 2015

On Tuesday, August 25, 2015 by Unknown in ,    

விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்டித்து அங்கு மறியல் நடந்தது.மறியலில்  இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹங்கீர் மற்றும் மாவட்ட தலைவர் செய்யது ஜஹீர் உசேன் கலந்து கொண்டனர்  இந்நிலையில் சம்பந்தப்பட்டநபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அபுதாகிர் தலைமையில், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., முத்துக்குமரனிடம் மனு அளிக்கப்பட்டது. இதே மனுவை மகேஷ்ரவன் எஸ்.பி.,யிடமும் அளித்தனர்.
On Tuesday, August 25, 2015 by Unknown in ,    
Image result for அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
சாத்தூர் ஒன்றியத்தில் 2–ம் கட்டமாக மக்கள் குறை கேட்கும் முகாம் 8 ஊராட்சிகளில் நடைபெற்றது. பெரிய கொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், நடுஞ்சூரங்குடி உட்பட 8 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–
தொகுதியில் ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே சாத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் இந்த முகாம் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 2–ம் கட்டமாக இந்த முகாம் நடைபெற்று வருகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். தமிழக முதல்வரின் சரித்திர சாதனை திட்டங்கள்தான், தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை பெற்று தந்தது.
குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் சரித்திர வெற்றியை பெற்றுள்ளார். தமிழக மக்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வருகின்றனர். அண்ணா காலத்தில் அண்ணன் தம்பி உறவு கட்சியினர் மத்தியில் நிலவியது. தற்போது தமிழக முதல்வர் அம்மா ஆட்சி காலத்தில் தெய்வம்–பக்தர்கள் கொண்ட உறவாக அ.தி.மு.க. திகழ்கின்றது. ஐந்தரை கோடி மக்கள் தெய்வமாக வணங்கும் தமிழர் குல சாமியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்சியளிக்கின்றார்.
இன்று முகவரி இல்லாத, அரசியலில் அநாதையாக்கப்பட்ட இளங்கோவன் தமிழக முதல்வரை தரம் தாழ்ந்து பேசியதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சரித்திர சாதனைகளை படைத்து வரும் தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
யூனியன் தலைவர் வேலாயுதம், நகராட்சி தலைவர் டெய்சிராணி, ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, மாணவரணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் வாசன், வக்கீல் பாஸ்கரன், தொகுதி செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் முனிஸ், வெம்பக்கோட்டை இளைஞரணி ஒன்றிய செயலாளர் காசித்துரைப் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Saturday, August 22, 2015

On Saturday, August 22, 2015 by Unknown in ,    
இளங்கோவன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்: வைகைசெல்வன் அறிக்கை
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இளங்கோவன் தொடர்ந்து அ.தி.மு.க.வையும், புரட்சித் தலைவி அம்மாவையும் பேசி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக வந்த எவரும் இவ்வளவு கொச்சைத்தனமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் பேசியது இல்லை. ஆனால், இந்த இளங்கோவன் தலைவராக வந்தது முதல் பிரேக் இல்லாத தண்ணி வண்டிபோல் ஓடிக்கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே பொறுத்துக் கொள்ளாமல் கட்சியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்திபவன், அரசியலில் கையேந்திபவனாக மாறி விட்டது. மாநிலத் தலைவர் பதவி என்பது, ஒரு நியமன பதவி, அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்ட இளங்கோவனால், ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்துவிட்டது போல பேசுவது என்பது, பிரேத பரிசோதனை முடிந்துவிட்ட பிணத்திற்கு உயிர் வந்து விட்டது என்பது போலத் தான் இருக்கிறது.
இந்திய பிரதமர் அவர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும் மனசாட்சியில்லாமல் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்களே? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிற உங்கள் பேச்சை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இளங்கோவன் மன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்
On Saturday, August 22, 2015 by Unknown in ,    
பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து கண்மாய்களுக்கு நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜன் முன்னிலை வகித்தார். இதில், அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற விவாதம்:
ராமமூர்த்தி(ஸ்ரீவில்லிபுத்தூர்): நீர்வள நிலவளத்திட்டம் சார்பில் கண்மாய் நீர்ப்பாசன சங்கங்களுக்கு விவசாயிகள் பயனடையும் வகையில் அறுவடை இயந்திரம், பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவிகள் வழங்கப்படவில்லை. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் காட்டுவிலங்குகள் தண்ணீர் அருந்த வருவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதனால் மலை அடிவாரப்பகுதியில் விலங்குகள் பயனடையும் வகையில் பண்ணைக்குட்டைகள் அமைக்க வேண்டும்.
ராமசுப்பிரமணியராஜா(மா விவசாயிகள் சங்கம்): தோட்டக்கலை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வர அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்.
இருளப்பன்(பிளவக்கல் அணை பிரிவு நீர்ப்பாசன சங்கம்): பிளவக்கல்-கோவிலாறு அணைகளில் இருந்து வெளியேறி கண்மாய்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அகலமாக இருந்த ஓடை, கால்வாய் அளவுக்கு குறுகியுள்ளது. இதனால் அணை திறக்கும் காலங்களில் கண்மாய்களில் நீர் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கண்மாய்களுக்கு செல்வதில் சிரமம் உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அம்மையப்பன்(வட்டார விவசாயிகள் சங்கம்): ராஜபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். அதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், நீர்வள நிலவள திட்டம் முடிந்தது. அதனால் வேறு திட்டங்களில் நீர்ப்பாசன சங்க விவசாயிகள் பயனடையும் கருவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதேபோல், வனத்துறை உதவியுடன் வனவிலங்குகளுக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும். தேசிய தோட்டக்கலை இயக்கம் என்பது மத்திய அரசு குறிப்பிடும் மாவட்டங்களில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது.
  இனி வருங்காலங்களில் கொண்டு வருவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பரிந்துரைக்கப்படும்.  பிளவக்கல்-கோவிலாறு அணைப்பகுதியிலிருந்து வெளியேறும் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சேத்தூர் பகுதியில் கால்நடை மருத்துவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்