Wednesday, September 23, 2015

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் என்ற சுற்றுப்பயண திட்டத்தின்கீழ் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்புக்கு வருகிறார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சேத்தூரில் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர் இரவு ராஜபாளையத்தில் தங்குகிறார்.
நாளை (24–ந்தேதி) காலை 8 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடரும் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் வனவிலங்கு மீட்பு மையத்தை பார்வையிருகிறார். பின்னர் காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள நூற்பு ஆலைக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசுகிறார்.
காலை 9.55 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு பால் உற்பத்தியாளர்களையும், நெசவாளர்களையும் சந்திக்கின்றார். 11.45 மணிக்கு சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களையும், 12 மணிக்கு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
1 மணிக்கு சாத்தூர் வரும் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணன்கோவிலில் இருந்து முக்குராந்தல் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் தீப்பெட்டி, பட்டாசு, பேனா நிப் தயாரிக்கும் தொழிலாளர்களுடன் சாப்பிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மதியம் ஆர்.ஆர். நகரில் ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு விருதுநகர் வரும் மு.க.ஸ்டாலின் அங்கு டீக்கடையில் தேநீர் அருந்துகிறார். 4.30 மணிக்கு கந்தசாமி–ராஜம்மாள் மண்டபத்தில் மூத்த குடி மக்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்களிடம் பேசுகிறார். 5.30 மணிக்கு எஸ்.எஸ்.கே. மண்டலத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
6.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும், 8 மணிக்கு கல்குறிச்சியிலும் 9 மணிக்கு காரியாபட்டியில் பொதுமக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment