Wednesday, September 23, 2015
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் என்ற சுற்றுப்பயண திட்டத்தின்கீழ் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இரவு 7 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்புக்கு வருகிறார். அங்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சேத்தூரில் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர் இரவு ராஜபாளையத்தில் தங்குகிறார்.
நாளை (24–ந்தேதி) காலை 8 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடரும் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் வனவிலங்கு மீட்பு மையத்தை பார்வையிருகிறார். பின்னர் காய்கறி சந்தைக்கு சென்று வியாபாரிகளிடம் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள நூற்பு ஆலைக்கு சென்று தொழிலாளர்களிடம் பேசுகிறார்.
காலை 9.55 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு பால் உற்பத்தியாளர்களையும், நெசவாளர்களையும் சந்திக்கின்றார். 11.45 மணிக்கு சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களையும், 12 மணிக்கு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
1 மணிக்கு சாத்தூர் வரும் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணன்கோவிலில் இருந்து முக்குராந்தல் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் தீப்பெட்டி, பட்டாசு, பேனா நிப் தயாரிக்கும் தொழிலாளர்களுடன் சாப்பிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். மதியம் ஆர்.ஆர். நகரில் ஸ்டாலின் ஓய்வெடுக்கிறார்.
மாலை 3 மணிக்கு விருதுநகர் வரும் மு.க.ஸ்டாலின் அங்கு டீக்கடையில் தேநீர் அருந்துகிறார். 4.30 மணிக்கு கந்தசாமி–ராஜம்மாள் மண்டபத்தில் மூத்த குடி மக்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவன அமைப்பாளர்களிடம் பேசுகிறார். 5.30 மணிக்கு எஸ்.எஸ்.கே. மண்டலத்தில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
6.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும், 8 மணிக்கு கல்குறிச்சியிலும் 9 மணிக்கு காரியாபட்டியில் பொதுமக்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது....
0 comments:
Post a Comment