Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
விருதுநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர்.
 முஸ்லிம் மக்களின் முக்கிய விழாவான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், விருதுநகரிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
 பின்னர் பெரியபள்ளிவாசலில் ஜமாத் தலைவர் முகமது எகியாகான் தலைமையிலும், செயலாளர் ராஜஉசேன் முன்னிலையிலும் இமாம் சேக்முகமது வழிகாட்டுதலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தியாக திருநாளான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
 இதேபோல், விருதுநகர் சின்னபள்ளிவாசலில் இமாம் சார்நவாஷ்கான் தலைமையிலும், கல்பள்ளிவாசலில் இமாம் அப்துல்கரீம் தலைமையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  விருதுநகர் ஆர்.ஆர்.நகர், ஆவுடையாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

0 comments: