Friday, August 28, 2015
விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாரமன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும். இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வம், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஜோசப் மரியரெக்ஸ், துணை வேளாண்மை அலுவலர் குருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment