Friday, August 28, 2015
விருதுநகர் மாவட்டம் தெற்கு வெங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாரமன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் வேளாண்மை துறையினருடன் பொதுமக்கள் இணைந்து முனைப்புடன் பார்த்தீனியச் செடிகளை ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தை கடைபிடித்து அழிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில், விளைநிலங்கள், தோட்டங்கள், பயிரிடப்படாத நிலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் பார்த்தீனியச் செடிகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை வேரோடு அகற்றுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செடிகளை அகற்றும் போது தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படாதவாறு கைகளில் துணிகள் அல்லது கையுறைகள் அணிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார். விளைநிலங்களில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். உளுந்தில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த குளோபிரிட் 5 மில்லி அளவில் விதையில் போட்டு நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும். இதே மருந்தை வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கு 100 மில்லி முதல் 125 மில்லி வரையில் தெளிக்க வேண்டும். அதேபோல், வயல் வரப்புகளில் களைகள் பரவாமல் தடுக்க களைக் கொல்லி தெளிக்கவும் விவசாயிகளை அவர் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வம், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் ஜோசப் மரியரெக்ஸ், துணை வேளாண்மை அலுவலர் குருபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment