Friday, August 28, 2015
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளது இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரமான முறையிலும், மலிவு விலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி சாம்பாரும், 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பில்லை சாதம் ஆகியவை மகளிர் குழுக்களால் சுகாதாரமான முறையில் தயார் செய்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சியில் பஜார், தலைமை மருத்துவமனை வளாகம், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளில் 8 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இந்த உணவகம் தொடங்கப்பட்ட 97 நாள்களில் ரூ.27.07 லட்சத்திற்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment