Friday, August 28, 2015
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மலிவு விலை உணவு விற்பனையின் மூலம் ரூ.27.07 லட்சம் கிடைத்துள்ளது இது குறித்து நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுகாதாரமான முறையிலும், மலிவு விலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி சாம்பாரும், 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம், கருவேப்பில்லை சாதம் ஆகியவை மகளிர் குழுக்களால் சுகாதாரமான முறையில் தயார் செய்து குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் நகராட்சியில் பஜார், தலைமை மருத்துவமனை வளாகம், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளில் 8 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இந்த உணவகம் தொடங்கப்பட்ட 97 நாள்களில் ரூ.27.07 லட்சத்திற்கு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது....
0 comments:
Post a Comment