Thursday, September 18, 2014
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
கூலிப்படையினர் கைது
தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.
கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிவாள் வெட்டு
சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.
கூலிப்படையினர் கைது
தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.
கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment