Thursday, September 18, 2014
ஆலந்தூர்,
சென்னை தரமணி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அழகு உத்தரவின் பேரில், தரமணி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீஸ்காரர் ஷிபு, இளைஞர் காவல் படை காவலர் விஷ்ணு ஆகியோர் தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல்அலீம் (வயது 39) என்பது தெரியவந்தது.
அவரது ஆட்டோவில் 2 அரிவாள் மற்றும் 3 கத்திகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது ஆட்டோவில் தனது நண்பர்கள் உதவியுடன் ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறினார். இதையடுத்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அப்துல்அலீமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment