Saturday, August 29, 2015
விருதுநகர் மாவட்டத்தில், நாட்டுக்கோழிப்பண்ணைகள்
அமைக்க தொழில்முனைவோர், விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு இறைச்சிக் கோழிப்பண்ணைத் தொழிலை
ஊக்குவிக்கும் வகையில் நிகழாண்டில் நாட்டுக் கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை
செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 107
நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்த மூலதனமான ரூ.1.29 லட்சம்
செலவில் 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம்
உள்ளவர்களுக்கு அரசின் சார்பில் கொட்டகை அமைக்க 25 சதவீதம் மானியம்
அளிக்கப்படும். இதை பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ
பண்ணை அமைத்து பயனடையலாம். ஏற்கனவே, இத்திட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பில்
பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் பயன்பெற இயலாது.
இதில், விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர்
விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள்
பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை
மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி
மையங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
இது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை
மருந்தகங்கள், கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை
தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
0 comments:
Post a Comment