Saturday, August 29, 2015
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக
முதல்வர் அறிவித்த நான்காவது பைப் லைன் திட்டப் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இதில், சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தனியார் சிலர்
எதிர்ப்பு தெரிவித்ததாக மேயரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில்
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர்
ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் உள்ள ஒரு
தனியார் கட்டடத்தின் அருகே குழாய் பதிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த இடத்தை
பார்வையிட்டனர்.
அப்போது, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என
ஆவணங்களில் இருப்பது தெரியவந்ததால் அந்த இடத்தில் உடனடியாக குழிகளைத்
தோண்டி குழாய்களை பதிக்க மேயர் உத்தரவிட்டார். அதன்படி, பொக்லைன்
இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.
இதுகுறித்து மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாநகர மக்களின் தேவைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 282 கோடி
நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 90 சதவீத
பணிகள் முடிவடைந்துள்ளன. தனியார் ஒருவர் குழாய் பதிக்கவிடாமல் தடுத்தது
தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.
முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும்
வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு: ஆய்வுப் பணிகளின்போது,
நாம் தமிழர் என்ற வளாகத்தின் உரிமையாளர் மூன்றாவது பைப் லைனில் இருந்து
முறைகேடாக மூன்று இணைப்புகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment