Saturday, August 29, 2015
முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக
முதல்வர் அறிவித்த நான்காவது பைப் லைன் திட்டப் பணிகள் நடைபெற்று
வருகின்றன. இதில், சில இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தனியார் சிலர்
எதிர்ப்பு தெரிவித்ததாக மேயரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமையில்
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர்
ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் உள்ள ஒரு
தனியார் கட்டடத்தின் அருகே குழாய் பதிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்த இடத்தை
பார்வையிட்டனர்.
அப்போது, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என
ஆவணங்களில் இருப்பது தெரியவந்ததால் அந்த இடத்தில் உடனடியாக குழிகளைத்
தோண்டி குழாய்களை பதிக்க மேயர் உத்தரவிட்டார். அதன்படி, பொக்லைன்
இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன.
இதுகுறித்து மேயர் செய்தியாளர்களிடம் கூறியது:
தூத்துக்குடி மாநகர மக்களின் தேவைக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ. 282 கோடி
நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுவரை 90 சதவீத
பணிகள் முடிவடைந்துள்ளன. தனியார் ஒருவர் குழாய் பதிக்கவிடாமல் தடுத்தது
தொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.
முதல்வர் அறிவித்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும்
வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு: ஆய்வுப் பணிகளின்போது,
நாம் தமிழர் என்ற வளாகத்தின் உரிமையாளர் மூன்றாவது பைப் லைனில் இருந்து
முறைகேடாக மூன்று இணைப்புகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து
அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment