Saturday, August 29, 2015

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வாரும் பணி கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. அங்குள்ள அமலை செடிகளை அகற்றும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக பொன்னன்குறிச்சி பகுதியில் இருந்து தூர்வாரும் பணி நடைபெற்றது. 10 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 8 அடி ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டது. இதனால் அந்த இடங்களில் ஊற்று தண்ணீர் பெருக்கெடுத்தது. மணலை வெளியேற்றுவதற்காக ஏராளமான லாரிகளும் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து தலைவர் அருணாசலம், கவுன்சிலர் பொன்பாண்டி உள்ளிட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆற்றில் அள்ளப்படும் மணல் விபரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் மணல் அள்ளப்படும் விவரம் குறித்து நகர பஞ்சாயத்து அலுவலர் மூலம் கணக்கிடலாம் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மணல் அள்ளும் பணி நடந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் 7 பிரிவுகளாக தூர்வாரும் பணி நடக்கிறது. முதல் பிரிவான அணை பகுதியில் 900 மீட்டர் பரப்பளவு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தற்போது 2, 3–வது பிரிவான 900 மீட்டர் முதல் 1,700 மீட்டர் வரையிலும் தூர்வாரும் பணி நடக்கிறது. பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 6 மாதங்களிலும், வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு ஆண்டுக்குள்ளும் தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளது.
மழைக்காலத்துக்கு முன்னதாக அணையை தூர்வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், சிறப்பு அனுமதி பெற்று இரவு பகலாக தூர்வாரும் பணி நடைபெறும். அங்கிருந்து அள்ளப்படும் மணலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் சேமித்து வைத்து, அரசு டெண்டர் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment