Saturday, August 22, 2015

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இளங்கோவன் தொடர்ந்து அ.தி.மு.க.வையும், புரட்சித் தலைவி அம்மாவையும் பேசி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக வந்த எவரும் இவ்வளவு கொச்சைத்தனமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் பேசியது இல்லை. ஆனால், இந்த இளங்கோவன் தலைவராக வந்தது முதல் பிரேக் இல்லாத தண்ணி வண்டிபோல் ஓடிக்கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே பொறுத்துக் கொள்ளாமல் கட்சியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்திபவன், அரசியலில் கையேந்திபவனாக மாறி விட்டது. மாநிலத் தலைவர் பதவி என்பது, ஒரு நியமன பதவி, அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்ட இளங்கோவனால், ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்துவிட்டது போல பேசுவது என்பது, பிரேத பரிசோதனை முடிந்துவிட்ட பிணத்திற்கு உயிர் வந்து விட்டது என்பது போலத் தான் இருக்கிறது.
இந்திய பிரதமர் அவர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும் மனசாட்சியில்லாமல் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்களே? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிற உங்கள் பேச்சை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இளங்கோவன் மன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment