Saturday, August 22, 2015

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி விமர்சித்த இளங்கோவன் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று வைகைசெல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இளங்கோவன் தொடர்ந்து அ.தி.மு.க.வையும், புரட்சித் தலைவி அம்மாவையும் பேசி வருவது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக வந்த எவரும் இவ்வளவு கொச்சைத்தனமாகவும், காட்டு மிராண்டித்தனமாகவும் பேசியது இல்லை. ஆனால், இந்த இளங்கோவன் தலைவராக வந்தது முதல் பிரேக் இல்லாத தண்ணி வண்டிபோல் ஓடிக்கொண்டிருப்பதை காங்கிரஸ் கட்சியினரே பொறுத்துக் கொள்ளாமல் கட்சியை விட்டே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்திபவன், அரசியலில் கையேந்திபவனாக மாறி விட்டது. மாநிலத் தலைவர் பதவி என்பது, ஒரு நியமன பதவி, அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்ட இளங்கோவனால், ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு உயிர் வந்துவிட்டது போல பேசுவது என்பது, பிரேத பரிசோதனை முடிந்துவிட்ட பிணத்திற்கு உயிர் வந்து விட்டது என்பது போலத் தான் இருக்கிறது.
இந்திய பிரதமர் அவர்களையும், தமிழக முதல்வர் அவர்களையும் மனசாட்சியில்லாமல் கண்டபடி விமர்சித்திருக்கிறீர்களே? அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துகிற உங்கள் பேச்சை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இளங்கோவன் மன்னிப்புகேட்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment