Monday, September 14, 2015
காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டியைச் சுற்றிலும்
ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக
உள்ளது. இங்கு, நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானிய வகைகள்
பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயம்
செய்யப்படுகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர்,
முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரிய கண்மாய் மூலம்
நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது.
இந்த கண்மாய்கள் நிறைந்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல்
விளைச்சல் இருக்கும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை
பொய்த்திருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள்
அவதிப்படுகின்றனர்.
இத்துடன், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வரத்துக்
கால்வாய்கள் தூர்வாராததால் தூர்ந்துபோயும் உள்ளதால், மழைநீரை சேமித்து
விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல்
மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், பெரும்பாலான விளைநிலங்கள்
மனையடிகளாக மாறியுள்ளன.
எனவே, இந்தப் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த
கம்பிக்குடி-சென்னம்பட்டி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி திட்டம்
உள்ளிட்டவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கர்
கூறியது: கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்ததால்
விளைச்சல் சரிவர இல்லை. கிணற்றுப் பாசனம் உள்ளவர்களும் நிலத்தடி நீர்
இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய வாங்கிய கடனை
அடைக்க முடியாமலும், பொருள்களை விளைவிக்க முடியாமலும் நஷ்டப்பட்டு
வருகிறோம்.
இந்தாண்டு மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள்
தூர்வாரப்படாததால், மழை நீரை சேமிப்பது கடினமே. எனவே, கண்மாய் மற்றும்
வரத்துக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
0 comments:
Post a Comment