Monday, September 14, 2015
காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டியைச் சுற்றிலும்
ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயம் முக்கியத் தொழிலாக
உள்ளது. இங்கு, நெல், சோளம், கம்பு, பருத்தி, கடலை உள்ளிட்ட தானிய வகைகள்
பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆனால், இப்பகுதியில் பருவமழையை நம்பியே விவசாயம்
செய்யப்படுகிறது. கம்பிக்குடி, பாப்பணம், மாந்தோப்பு, ஆவியூர்,
முடுக்கன்குளம், எஸ்.மரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பெரிய கண்மாய் மூலம்
நீர்ப்பாசன வசதி பெறப்படுகிறது.
இந்த கண்மாய்கள் நிறைந்தால், ஆண்டுக்கு இருபோகம் நெல்
விளைச்சல் இருக்கும். இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக பருவமழை
பொய்த்திருப்பதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள்
அவதிப்படுகின்றனர்.
இத்துடன், கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், வரத்துக்
கால்வாய்கள் தூர்வாராததால் தூர்ந்துபோயும் உள்ளதால், மழைநீரை சேமித்து
விவசாயம் செய்ய முடியவில்லை.
விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, சீமைக்கருவேல்
மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும், பெரும்பாலான விளைநிலங்கள்
மனையடிகளாக மாறியுள்ளன.
எனவே, இந்தப் பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த
கம்பிக்குடி-சென்னம்பட்டி கால்வாய் திட்டம், கிருதுமால் நதி திட்டம்
உள்ளிட்டவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கர்
கூறியது: கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். பருவமழை பொய்த்ததால்
விளைச்சல் சரிவர இல்லை. கிணற்றுப் பாசனம் உள்ளவர்களும் நிலத்தடி நீர்
இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், விவசாயம் செய்ய வாங்கிய கடனை
அடைக்க முடியாமலும், பொருள்களை விளைவிக்க முடியாமலும் நஷ்டப்பட்டு
வருகிறோம்.
இந்தாண்டு மழை பெய்தாலும், நீர்வரத்துக் கால்வாய்கள்
தூர்வாரப்படாததால், மழை நீரை சேமிப்பது கடினமே. எனவே, கண்மாய் மற்றும்
வரத்துக் கால்வாய்களை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
-
சேரம்பாடி பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 2 கும்கி யானைகள் மூலம் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment