Saturday, August 29, 2015
விருதுநகர்
மாவட்டம், சிவகாசி சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் சாந்தி (36). இவரது மகள்
செல்வி (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது.). இவருக்கு திருமணம் முடிக்க நினைத்த
பெற்றோர் வரன் தேடி வந்தனர். திருமணம் தள்ளிப்போவதாக வருத்தமடைந்த சாந்தி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள ஜோதிடர் சிவசுப்பிரமணியனிடம்
மகள் ஜாதகத்தை கொடுத்தார். ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், ‘செல்விக்கு
மாங்கல்ய தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்’ என்று கூறினார்.
பரிகாரத்தையும் தானே செய்வதாக கூறி தனது மகன் முத்து மாரீஸ்வரன்,
செல்விக்கு தாலிகட்டி, ஒருநாள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் தோஷம்
சரியாகிவிடும் என்று கூறினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் செல்விக்கு
முத்துமாரீஸ்வரன் தாலி கட்டினார்.
இருவரும்
ஒரு நாள் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது, சிவசுப்பிரமணியன், செல்வியிடம்
தனது மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என
மிரட்டியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் அழைக்க வந்த தனது தாயுடன்
செல்ல செல்வி மறுத்து விட்டார். இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் சாந்தி
கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்தார். மைனர் பெண்ணாக இருந்ததால் திருமணம்
செல்லாது என கூறிய ஐகோர்ட் கிளை, தாய் சாந்தியுடன் செல்வி செல்ல
உத்தரவிட்டது. இதன்படி செல்வியும், தாயாருடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில்,
கடந்த 2ம் தேதி ஜோதிடர் சிவசுப்பிரமணியன், அவரது மகன் முத்துமாரீஸ்வரன்,
உறவினர் வைத்தியலிங்கம் 3 பேரும் சாந்தி வீட்டிற்கு வந்து சாந்தியின் தாய்
முத்துலட்சுமியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த செல்வியை கடத்தி சென்று
விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தி சிவகாசி அனைத்து மகளிர்
காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3
பேரையும் தேடி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை, சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியது. அங்கு கூடிய ஒரு கும்பல், நிர்வாணமாக பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டது....
0 comments:
Post a Comment