Friday, September 09, 2016
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு இந்து கோவில்களின் வருமானத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதுவரை ஒரு புதிய கோவில்களை கூட கட்டவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மானிய கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தனது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டது.இந்துக்களின் சொத்தை எப்படி அரசு பயன்படுத்தலாம்? இதுபோல் பிற மதத்தினரின் சொத்தை பயன்படுத்த முடியுமா? தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டும். ஆனால் அரசு ரூ.60 கோடிதான் வருமானத்தை வசூல் செய்கிறது. சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் இடத்துக்கு ரூ.3 தான் வாடகை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு இந்துவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தங்கள் பகுதியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை விரிவாக கேட்டு பெற வேண்டும். இந்து கோவில்களை இந்துக்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.இந்தி மொழி
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தி மொழி கூடாது என்று கூறுகிறார். அவருடைய மகள், பேரன் போன்றவர்கள் எப்படி இந்தி பேசுகின்றனர்? தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர் இந்தி மொழியை தனியாக பணம் கொடுத்து கற்று தேர்வு எழுதுகிறார்கள். இப்படி தனியாக தேர்வு எழுதாமல் பள்ளிகளிலேயே இந்தி மொழியை இலவசமாக கற்பிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கருணாநிதி குடும்பத்தில் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் வழியில் படிக்கிறார்களா? இல்லை. மு.க.ஸ்டாலினின் மருமகன் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக கூட கிடையாது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களின் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் பள்ளியில் படிக்கிறார்கள் என்று நிரூபித்தால், நான் இப்போதே தி.மு.க. கட்சியில் என்ன, தி.க.வில் கூட இணைய தயார். நம் வாழ்க்கையில் ஒரு போதும் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், மதமாற்றத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment