Friday, September 09, 2016
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு இந்து கோவில்களின் வருமானத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதுவரை ஒரு புதிய கோவில்களை கூட கட்டவில்லை. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் கோவில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாக மானிய கோரிக்கையின் போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 4 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு தனது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டது.இந்துக்களின் சொத்தை எப்படி அரசு பயன்படுத்தலாம்? இதுபோல் பிற மதத்தினரின் சொத்தை பயன்படுத்த முடியுமா? தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் இருந்து சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டும். ஆனால் அரசு ரூ.60 கோடிதான் வருமானத்தை வசூல் செய்கிறது. சென்னையில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிரவுண்ட் இடத்துக்கு ரூ.3 தான் வாடகை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு இந்துவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தங்கள் பகுதியில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து விவரங்களை விரிவாக கேட்டு பெற வேண்டும். இந்து கோவில்களை இந்துக்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.இந்தி மொழி
தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தி மொழி கூடாது என்று கூறுகிறார். அவருடைய மகள், பேரன் போன்றவர்கள் எப்படி இந்தி பேசுகின்றனர்? தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் பேர் இந்தி மொழியை தனியாக பணம் கொடுத்து கற்று தேர்வு எழுதுகிறார்கள். இப்படி தனியாக தேர்வு எழுதாமல் பள்ளிகளிலேயே இந்தி மொழியை இலவசமாக கற்பிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கருணாநிதி குடும்பத்தில் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் வழியில் படிக்கிறார்களா? இல்லை. மு.க.ஸ்டாலினின் மருமகன் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக கூட கிடையாது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்களின் குழந்தைகள் மற்றும் பேரன், பேத்திகள் யாராவது தமிழ் பள்ளியில் படிக்கிறார்கள் என்று நிரூபித்தால், நான் இப்போதே தி.மு.க. கட்சியில் என்ன, தி.க.வில் கூட இணைய தயார். நம் வாழ்க்கையில் ஒரு போதும் தீண்டாமையை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், மதமாற்றத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.இவ்வாறு எச்.ராஜா பேசினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment