Friday, September 09, 2016
சென்னை கொருக்குப்பேட்டை கே.சி. கார்டன் 2–வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி(வயது 45). இவர், முதல் கணவரான சேகரை விட்டு பிரிந்து தற்போது குமாருடன் வசித்து வருகிறார்.லட்சுமி, 42–வது வட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஆவார். மேலும் கணவர் குமாருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.நேற்று காலை லட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், லட்சுமியுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்தார். பின்னர் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.ஆஸ்பத்திரியில் சாவு
கழுத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே வந்த லட்சுமி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கொருக்குபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.செல்போன் சிக்கியது
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கொலையாளியின் செல்போன் போலீசாரிடம் சிக்கியது. அந்த செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் கொலையாளி ராஜபாளையத்தை சேர்ந்த கணேஷ்(26) என்பதும், சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.கொலை செய்யப்பட்ட லட்சுமியின் உறவினரான மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேகலாவுக்கு கணேஷ் அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேகலா, கணேஷ் உடனான கள்ளத்தொடர்பை துண்டித்து விட்டு தனியாக சென்று விட்டார்.வாலிபர் கைது
இதனால் தனது கள்ளக்காதலி மேகலாவை தேடி வந்த கணேஷ், நேற்று காலை லட்சுமியின் வீட்டுக்கு சென்று மேகலா குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதுங்கி இருந்த கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 2 மணி நேரத்துக்குள் கொலையாளியை கைது செய்த கொருக்குப்பேட்டை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெகுவாக பாராட்டினார்.பட்டப்பகலில் தி.மு.க. பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment