Friday, September 09, 2016
மும்பை, மும்பை விக்ரோலி பார்க்சைடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தார். தான் வியாபாரம் செய்யும் இடத்தை மூதாட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவரை வியாபாரம் செய்யவிடாமல் பழவியாபாரி ஒருவர் துரத்தியதாக கூறப்படுகிறது. அந்த பழ வியாபாரி வடமாநிலத்தை சேர்ந்தவர். இது குறித்து மூதாட்டி விக்ரோலியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டு உள்ளார். நேற்று அந்த கட்சியை சேர்ந்த 10 பேர் பழவியாபாரியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் வைத்திருந்த பழவகைகளையும் சாலையில் வீசி எறிந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடமாநிலத்தை சேர்ந்தவரை நவநிர்மாண் சேனாவினர் தாக்கிய இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment