Thursday, September 18, 2014
பெரியார் 136-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment