Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதால் தத்தளித்த 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: