Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியார் ஈ.வெ.ரா 136-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரபாகரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா கே.பரமசிவன், துணை மேயர் ஜெகநாதன், பொருளாளர் கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சரவணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நகர கூட்டுறவு சங்க தலைவர் டால் சரவணன், மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ள புவனேசுவரி, மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பேபி சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

தி.மு.க.-ம.தி.மு.க.

தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர அமைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் நமசிவாயம் என்ற கோபி, பூக்கடை அண்ணாத்துரை, பொதுக்குழு வின்சர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்வின் ரொட்ரிகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயின் உசேன், மணப்படை மணி, சுதர்சன், விஜயகுமார், கா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநகர தலைவர் ரத்தினசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரவிதேவேந்திரன், சக்தி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ஈழன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிங் தேவேந்திரன், பொட்டல் கண்ணன், பெருமாள் பாண்டியன், முத்துப்பாண்டியன், பழனி மாரியப்பன், முத்து, முருகையா பாண்டியன், தினேஷ், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

அருந்தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

0 comments: