Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 32). அவருடைய மனைவி சுதா ராஜேசுவரி (27). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சுதா ராஜேசுவரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதா ராஜேசுவரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுதா ராஜேசுவரி, குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: