Tuesday, September 16, 2014
டிப்ளமோ நர்சிங் கவுன்சிலிங்’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.
18-ந்தேதி வரை நடக்கிறது
கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.
18-ந்தேதி வரை நடக்கிறது
கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...

0 comments:
Post a Comment