Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
டிப்ளமோ நர்சிங் கவுன்சிலிங்’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.

கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.

18-ந்தேதி வரை நடக்கிறது

கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.

0 comments: