Sunday, September 14, 2014
அகர்த்தலாவில் உள்ள தாக்கர்ஜலா உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 16வயதான இருவரது உடல்களும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிமா தெபர்மா, பினா தெபர்மா என்ற இந்த மாணவிகள் ரகசியமாக செல்போனைப் பயன்படுத்தியுள்ளனர். அது அங்கு தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி ஹாஸ்டல் வார்டன் மற்றும் மாணவிகளின் பொறுப்பாளரும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அவர்கள் உடலில் எந்த விதக் காயமோ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்களோ இல்லை என்று காவல்துறை கூறினாலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கான்பூரில் கடந்த மாதம் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வந்ததற்காக ஆசிரியர் ஒருவர் மாணவியை அடித்து உதைத்து, ஆடைகளைக் களைந்து 2 மணி நேரம் வகுப்பில் சக மாணவிகள் முன்பு நிறுத்தியதால் ஏற்பட்ட அவமானத்தில் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
 
 
0 comments:
Post a Comment