Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது. ஊழியர்கள் 2 பேர் சிக்கி தவித்தனர்.

மாநகராட்சி அலுவலகம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தின் கட்டிட அமைப்பு தரை தளம், முதல் தளம், 2-வது தளம் மற்றும் அதற்கு மேல் மாடி என உள்ளது. இதில் தரைதளத்தில் இருந்து முதல் தளம், 2-வது தளத்திற்கு செல்வதற்கு ‘லிப்ட்’ வசதி உள்ளது. முதல் தளத்தில் மேயரின் அறையும், மாநகராட்சி கூட்டரங்கம் உள்பட துறை அதிகாரிகளின் அலுவலகம், 2-வது தளத்தில் ஆணையரின் அறை உள்பட அதிகாரிகளின் அறை அலுவலகம் உள்ளது.

தரைதளத்திலும் முக்கிய அதிகாரிகளின் அறைகள் உள்ளன. தரைதளத்தில் இருந்து முதல் தளம் மற்றும் 2-வது தளத்திற்கு செல்ல மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்துவது உண்டு. சிலர் படிக்கட்டுகள் வழியாகவும் செல்வார்கள்.

‘லிப்ட்’ நடுவழியில் நின்றது

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணிக்கு மேல் ‘லிப்ட்’ தரைதளத்தில் இருந்து 2-வது தளத்திற்கு சென்ற போது திடீரென நடு வழியில் நின்றது. அதன் உள்ளே லிப்ட்டை இயக்கும் ஊழியர் குமாரும், மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவரும் என 2 பேர் இருந்தனர். அவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு ‘லிப்ட்’ நின்றது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சக ஊழியர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இதில் மின் தடை ஏற்பட்டதால் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஜெனரேட்டரை உடனடியாக இயக்கினர். அதன்பின் மின்சாரம் வந்ததும் ‘லிப்ட்’ இயங்கியது. சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் 2 பேரும் தவித்தப்படி இருந்தனர். லிப்ட் இயங்கி 2-வது தளத்திற்கு வந்ததும், அதில் இருந்து வெளியே வந்ததும் 2 பேர் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் மாநகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

0 comments: