Sunday, September 07, 2014
நாமக்கல்லை சேர்ந்தவர் துரை(வயது 32). இவர் திருப்பூர் சந்திராபுரம் மர்சியம்மாள் நகர் 2–வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் லாரி ஒர்க்ஷாப் வைத்துள்ளார். சம்பவத்தன்று துரை தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை துரையின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துரை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து துரை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தலைமை ஏட்டு விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி திருக்கன்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் அருண்குமார்(23), சேலம் ராமரெட்டிபட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment