Sunday, September 07, 2014
நாமக்கல்லை சேர்ந்தவர் துரை(வயது 32). இவர் திருப்பூர் சந்திராபுரம் மர்சியம்மாள் நகர் 2–வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் லாரி ஒர்க்ஷாப் வைத்துள்ளார். சம்பவத்தன்று துரை தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை துரையின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துரை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து துரை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தலைமை ஏட்டு விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி திருக்கன்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் அருண்குமார்(23), சேலம் ராமரெட்டிபட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment