Sunday, September 07, 2014
நாமக்கல்லை சேர்ந்தவர் துரை(வயது 32). இவர் திருப்பூர் சந்திராபுரம் மர்சியம்மாள் நகர் 2–வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் லாரி ஒர்க்ஷாப் வைத்துள்ளார். சம்பவத்தன்று துரை தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை துரையின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துரை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து துரை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தலைமை ஏட்டு விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி திருக்கன்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் அருண்குமார்(23), சேலம் ராமரெட்டிபட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...

0 comments:
Post a Comment