Sunday, September 07, 2014
திருப்பூரில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகளை சிலர் வெட்டி அகற்றினார்கள். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி 500 கிலோ மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட கருவம்பாளையம், வெடத்தலங்காடு 4–வது வீதியில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையோரம் உள்ளன. இந்த பகுதியில் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் மோதி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், நேற்று காலை சாலையோரம் இருந்த 10–க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியவர்களை எச்சரிக்கை செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பொது இடத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த மரக்கட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேனில் ஏற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பொதுஇடங்களில் இருந்த மரக்கிளையை வருவாய்த்துறைக்கு தெரியாமல் வெட்டிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், திருப்பூர் சப்–கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் அந்த பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...

0 comments:
Post a Comment