Sunday, September 07, 2014
திருப்பூரில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளைகளை சிலர் வெட்டி அகற்றினார்கள். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தி 500 கிலோ மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 49–வது வார்டுக்கு உட்பட்ட கருவம்பாளையம், வெடத்தலங்காடு 4–வது வீதியில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையோரம் உள்ளன. இந்த பகுதியில் மின்கம்பிகளின் மீது மரக்கிளைகள் மோதி அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், நேற்று காலை சாலையோரம் இருந்த 10–க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தியவர்களை எச்சரிக்கை செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பொது இடத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டக்கூடாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
மேலும் சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், வருவாய் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன. சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த மரக்கட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேனில் ஏற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பொதுஇடங்களில் இருந்த மரக்கிளையை வருவாய்த்துறைக்கு தெரியாமல் வெட்டிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி விஜயராகவன், திருப்பூர் சப்–கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதனால் அந்த பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment