Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by Unknown in ,    
  


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை தீவைத்துக் கொலை செய்ததாக அவரது சித்தியை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(12.09.2014) கைது செய்துள்ளனர்.
 
ஆத்தூர் அருகில் கீரனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் காமேஸ்வரன்(8). இங்குள்ள இந்து துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் 1.45க்கு காமேஸ்வரன் பள்ளி விட்டு திரும்பியபோது அவரது தாய் டெய்சிராணியின் சகோதரி பேச்சி அம்மாள்(30) காமேஸ்வரனை பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவரது கையை கட்டி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார்.
 
பலத்த தீக்காயமடைந்த சிறுவனின் அலறல் கேட்டு காமேஸ்வரனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு மாலை 5.30க்கு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
 
சிறுவன் அருகிலுள்ள கோவிலில் சர்க்கரை பொங்கல் வாங்கி வந்ததாகவும் அதனை அவரது வடக்கு தெருவிலுள்ள ஆச்சிக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பேச்சி அம்மாள் தனக்கும் வாங்கி வரக்கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு காமேஸ்வரன் மறுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட பேச்சி அம்மான் கையை கட்டி தீவைத்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
 
ராமையா நாடார் மகளான பேச்சி அம்மாளுக்கு திருமணமாகவில்லை. ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: