Saturday, September 13, 2014
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் 3 ஆம் வகுப்பு படிக்கும்
மாணவரை தீவைத்துக் கொலை செய்ததாக அவரது சித்தியை காவல்துறையினர்
வெள்ளிக்கிழமை(12.09.2014) கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகில் கீரனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி.
கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் காமேஸ்வரன்(8). இங்குள்ள இந்து துவக்கப்
பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் 1.45க்கு காமேஸ்வரன்
பள்ளி விட்டு திரும்பியபோது அவரது தாய் டெய்சிராணியின் சகோதரி பேச்சி
அம்மாள்(30) காமேஸ்வரனை பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவரது கையை
கட்டி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார்.
பலத்த தீக்காயமடைந்த சிறுவனின் அலறல் கேட்டு காமேஸ்வரனை மீட்டு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு மாலை
5.30க்கு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
சிறுவன் அருகிலுள்ள கோவிலில் சர்க்கரை பொங்கல் வாங்கி வந்ததாகவும் அதனை
அவரது வடக்கு தெருவிலுள்ள ஆச்சிக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பேச்சி
அம்மாள் தனக்கும் வாங்கி வரக்கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு காமேஸ்வரன்
மறுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட பேச்சி அம்மான் கையை கட்டி தீவைத்து
விட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
ராமையா நாடார் மகளான பேச்சி அம்மாளுக்கு திருமணமாகவில்லை. ஆத்தூர்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து
வருகின்றனர். இச்சம்பவம் கீரனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment