Saturday, September 13, 2014
பாஜக சார்பில்
நெல்லை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வேட்புமனுவை வாபஸ்
பெற்ற வெள்ளையம்மாள் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அதிமுக இன்று
வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று
(வெள்ளிக்கிழமை) பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த
நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை
உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இம்மாதம் 18-ஆம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை
முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு பாஜக வேட்பாளராக
அறிவிக்கப்பட்டிருந்த ஜி.பி.ஆர். வெள்ளையம்மாள் தனது வேட்பு மனுவை வாபஸ்
பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அவரும், அவருடைய கணவரும், பாஜக வர்த்தக பிரிவு மாநிலச்
செயலாளருமான கணேச பெருமாள்ராஜா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக
முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களைக் கட்சியின் அடிப்படை
உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன்,
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன்
எம்.பி., ஆகியோரும் உடன் இருந்தனர்.
சென்னை மாநகராட்சி 166-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான நீதி
சேவியர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, அவரும் நேரில்
சந்தித்து தன்னைக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்
என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
0 comments:
Post a Comment