Saturday, September 13, 2014
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உத்ரா (வயது 28). இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கோவை கணபதி மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்–தேவிகாவின் மகன் சதீஷ்பாபுவுக்கும் (35) எனக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்பாபு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாக என்னிடம் கூறினார்கள். திருமணம் முடிந்த பின்பு சதீஷ்பாபு என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றபோதுதான் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நான் கோவை வந்துவிட்டேன். பின்னர் இதுகுறித்து எனது மாமனார்–மாமியாரிடம் கேட்டபோது, நீ எனது மகனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் நந்தகோபால், தேவிகா மற்றும் சதீஷ்பாபு ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான நந்தகோபால், தேவிகா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment