Saturday, September 13, 2014
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உத்ரா (வயது 28). இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கோவை கணபதி மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்–தேவிகாவின் மகன் சதீஷ்பாபுவுக்கும் (35) எனக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்பாபு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாக என்னிடம் கூறினார்கள். திருமணம் முடிந்த பின்பு சதீஷ்பாபு என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றபோதுதான் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நான் கோவை வந்துவிட்டேன். பின்னர் இதுகுறித்து எனது மாமனார்–மாமியாரிடம் கேட்டபோது, நீ எனது மகனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் நந்தகோபால், தேவிகா மற்றும் சதீஷ்பாபு ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான நந்தகோபால், தேவிகா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment