Saturday, September 13, 2014
வால்பாறையில் வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் மேற்கூரை வழியாக ஏறி வெளியே வந்து பெண் தனது குடும்பத்துடன் உயிர்தப்பி னார்.
அட்டகாசம்
வால்பாறையை அடுத்துள்ள சிங்கோனா, பெரியகல்லார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு (டேன்டீ) சொந்தமான சிங்கோனா முதல் பிரிவு குடியிருப்பு பகு திக்குள் புகுந்த காட்டு யானைகள் மூன்று வீடுகளை இடித்து பொருட்களை சூறை யாடின. அதே வீடுகளை மீண் டும் 10–ந் தேதி இரவு இடித்து தள்ளின.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு பெரியகல்லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் 9 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. மேரி என்ற தொழி லாளியின் வீட்டின் சமைய லறையின் கதவை உடைத்தன. வீட்டின் உள் அறையில் தனது மகன், மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்த மேரி சமையல் அறையில் பொருட் கள் விழும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தார். அப்போது யானைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு துதிக்கையை உள்ளேவிட்டு சமை யல் அறையில் இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிட்டுக் கொண் டிருந்தன.
உயிர் தப்பினார்கள்
இதை பார்த்து அச்சம் அடைந்த அவர், உடனடியாக ஏணி வழியாக வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகளை பிரிந்து எறிந்து விட்டு, தனது மகன், மகள் களுடன் வெளியே வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மானாம்பள்ளி வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர் களும் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டினார்கள்.
ஆனால் யானைகள் போகாமல் அங்கேயே நின்று கொண்டு வீட்டை இடித்தன.அதிகாலை 3.30 மணிவரை அந்த இடத்தை விட்டு நகராமல் போக்கு காட்டி வந்த யானைகள் அதன்பின் வனப்பகுதிக்குள் சென்றன. பெண் தொழிலாளி மேரி தனது மகன், மகள்களுடன் மேற்கூரை வழியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பி னார்கள்.
இது குறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், யானைகள் வரும் போது நாங்களும், வனத்துறையினரும் துரத்தினால் சென்றுவிடும். ஆனால் தற்போது சுற்றித் திரியும் யானைகள் துரத்தி னால் போகாமல் எதிர்த்து கொண்டு விரட்டுகிறது. எனவே கட்டாயம் கூடுதலாக வனத்துறையினரை பணியில் அமர்த்தி காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி குடியிருப்புக்குள் நுழைய விடாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
தகவல் கொடுக்க வேண்டும்
இது தொடர்பாக வனத் துறையினர் கூறும் போது, இந்த ஆண்டு முன்கூட்டியே கேரள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வரத் தொடங்கி உள்ளதால், மேலும் அதிகளவு யானைகள் வருவ தற்கு வாய்ப்புகள் உள்ளன.எனவே வால்பாறை சுற்றுவட் டார எஸ்டேட் பகுதி மக்கள் அதிகவனத்துடன் இருக்க வேண்டும்.கட்டாயப்படுத்தி யானைகளை விரட்டினால், அந்த கோபத்தை வேறு இடங் களில் காட்டிவிடும். இதனால் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படுவதற்கு வாய்ப் புள்ளது. எனவே நாங்களும் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக் கும் பணியில் தான் ஈடுபடு கின்றோம். எனவே எந்த எஸ்டேட் பகுதியில் யானை களை பார்த்தாலும் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மாற்று வீடு
தகவல் அறிந்து சம்பவயிடத் திற்கு வந்த வால்பாறை தாசில் தார் நேரு, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகுரு, வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் மேரியின் குடும்பத்திற்கு குடியிருக்க மாற்று வீடு ஏற்பாடு செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மேரி குடும்பத் திற்கு அரிசி, ரேஷன் பொருட் கள், காய்கறிகள், இலவச வேட்டி–சேலை ஆகியவை களையும் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment