Saturday, September 13, 2014
ஆனைமலையில் திருமண ஆசை வார்த்தை கூறி பிளஸ்–1 மாணவியை கடத்திச்சென்று கற்பழித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பிளஸ்–1 மாணவி கடத்தல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 11–ம் வகுப்பு படித்து வரும் மாணவி, கடந்த 1–ந் தேதி மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, ஆனைமலை அருகே உள்ள வளந்தாயமரத்தில் கூலி வேலை செய்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கையா (27) என்பவர் அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. அத்துடன் அவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் திண்டுக்கல் விரைந்து சென்று அங்கு இருந்த தங்கையா மற்றும் அந்த மாணவியை மீட்டு, ஆனைமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது, திருமண ஆசைவார்த்தைக்கூறி அந்த மாணவியை தங்கையா கடத்திச்சென்றதும், அதற்கு தங்கையாவின் நண்பரான தெய்வமணி உதவியாக இருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் தங்கையாவையும், அவருடைய நண்பர் தெய்வமணியையும் (32) கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
5 குழந்தைகள்
மேலும் போலீசார் அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தைக்கூறி கடத்திச்சென்ற தங்கையாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 5 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment