Saturday, September 13, 2014
ஆனைமலையில் திருமண ஆசை வார்த்தை கூறி பிளஸ்–1 மாணவியை கடத்திச்சென்று கற்பழித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பிளஸ்–1 மாணவி கடத்தல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 11–ம் வகுப்பு படித்து வரும் மாணவி, கடந்த 1–ந் தேதி மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, ஆனைமலை அருகே உள்ள வளந்தாயமரத்தில் கூலி வேலை செய்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கையா (27) என்பவர் அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. அத்துடன் அவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் திண்டுக்கல் விரைந்து சென்று அங்கு இருந்த தங்கையா மற்றும் அந்த மாணவியை மீட்டு, ஆனைமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது, திருமண ஆசைவார்த்தைக்கூறி அந்த மாணவியை தங்கையா கடத்திச்சென்றதும், அதற்கு தங்கையாவின் நண்பரான தெய்வமணி உதவியாக இருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் தங்கையாவையும், அவருடைய நண்பர் தெய்வமணியையும் (32) கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
5 குழந்தைகள்
மேலும் போலீசார் அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தைக்கூறி கடத்திச்சென்ற தங்கையாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 5 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment