Saturday, September 13, 2014
காதலிக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு நடந்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதலிக்கு திருமண ஏற்பாடு
கோவையை அடுத்த பிரஸ்காலனி அருகேயுள்ள பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகமத்சாலியா. இவருடைய மகன் ரகமத்துல்லா (வயது 29). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரகமத்துல்லா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிற்கு அவர்களது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளர். இதுகுறித்து தகவல் அறிந்த ரகமத்துல்லா அந்த பெண்ணிடம் போனில் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் ரகமத்துல்லாவிடம் பேசவில்லை.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இதனால் கடந்த சில நாட்களாக ரகமத்துல்லா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் நாயக்கனூர் மாகாளியம்மன் கோவில் அருகேயுள்ள ரெயில்வே லெவல் கிராசிங் பகுதியில் நின்று கொண்டு ரகமத்துல்லா போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ரகமத்துல்லா ரெயில் முன் பாய்ந்தார்.
இதில் ரெயிலில் அடிபட்டு ரகமத்துல்லா கைகள், கால்கள் துண்டு துண்டாகி துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தால் ரெயில் உடனே அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ரகமத்துல்லா உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment