Wednesday, September 17, 2014
முத்தூர் அருகே மு.வேலாயும்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஒரு செடியில் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு உருவாகியுள்ளது.
மரவள்ளி கிழங்கு செடி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சியை பள்ளி வளாகத்தில் ஊன்றி வைத்து தினமும் நீர் பாய்ச்சி வந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு செடி சுமார் 7 அடிக்கு மேல் நன்கு வளர்ந்து விட்டது.
40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் இந்த மரவள்ளிகிழங்கு செடியை வெட்டிவிட்டு அடியில் தோண்டி பார்த்தபோது மரவள்ளி கிழங்கு நீண்டதாகவும், உருண்டையாகவும் மிகப்பெரிய ராட்சத அளவில் பெரிய கிழங்காக இருந்ததை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நேரில் வந்து இந்த பெரிய மரவள்ளி கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு சுமார் 40 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது.
ஆச்சரியம் அளிக்கிறது
இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:– மரவள்ளிகிழங்கு கிழங்கு வகையை சேர்ந்ததாகும். இந்தியாவில் மரவள்ளிகிழங்கு நேரடியாக வேகவைத்த உணவுப்பொருளாகவும், ஜவ்வரிசி, பாயாசம், சிப்ஸ் மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு இனிப்பு மற்றும் கசப்பு ஆகிய 2 வகைகளில் உள்ளது. மரவள்ளி கிழங்கின் உள்ளே இறுகிய நிலையில் வெண்மை நிறத்தில் மாவுப்பொருள் உள்ளது. மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம், ஆல்கஹால் தயாரிப்பதற்கு உபரி மூலப்பொருளாக பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு செடி 1 வருட பயிராகும். சாதாரணமாக மரவள்ளி கிழங்கு செடியை அறுவடை செய்யும்போது கிழங்கு ஒன்று 1 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இந்த அரசு பள்ளியில் ஒரு செடியில் உருவான மரவள்ளிகிழங்கு மிகப்பெரிய அளவில் அதிக எடை கொண்டதாக உருவாகியுள்ளது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment