Wednesday, September 17, 2014
தாராபுரம் அகஸ்தீஸ்வர் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
கோவில் நிலங்கள்
தாராபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களான அகஸ்தீஸ்வரர் கோவில், கல்யாணராமர் கோவில், உத்திர வீரராகவபெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில் உள்பட 5 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தாராபுரம் வடக்கு, கொளத்துப்பாளையம், தாராபுரம் தெற்கு, கல்யாணராமர் படுகை, செப்பு குண்டான் வயல், காரமேடு, சாமிவயல், கிருஷ்ணகோவில் வயல், கலர் வயல், பெரியகாரமேடு, கண்ணன் வயல், பிள்ளையார் முக்காணி, சாம்பான் வயல், ஆதிகாரம்பிள்ளைவயல், தாளமுக்காணி, தோப்பு வயல், தேவய்யன் வயல், காரமேடு வயல், புளியடிவயல், கருப்பக்கட்டை வயல், மஞ்சக்காணி வயல், சுள்ளுக்குத்தி வயல், ஒத்தக்குண்டல் வயல், நல்லக்காள் முக்காணி வயல் ஆகிய பகுதிகளில் உள்ளது. இந்த நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள் நெல், கரும்பு, தென்னை, மற்றும் காய்கறிகள் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுகிறது. அதன்படி மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் நேற்று கல்யாண ராமர் கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டது.
ரூ.5.32 லட்சம்
இந்த ஏலம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏற்கனவே நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வது வருபவர்கள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
அதன்படி காலையில் தொடங்கிய ஏலம் மாலை வரை நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் போட்டிபோட்டு ஏலத்தொகையை கேட்டனர். தற்போது காய்கறி பயிர்களுக்கு ஓரளவுக்குவிலை கிடைத்துள்ளதால் ஏலத்தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று கோவில் நிலங்கள் ஓராண்டு குத்தகைக்கு ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 400–க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தொகை அடுத்த ஆண்டு ஜூன் 30–ந் தேதி வரை மட்டும் என்றும் ஜூலை மாதம் 1–ந்தேதி மீண்டும் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...

0 comments:
Post a Comment