Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் வி.பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.ஆர்.துரைசாமி முன்னிலை வகித்தார். முகாமை பி.குணசேகரன் தொடங்கி வைத்தார். சங்க முன்னாள் தலைவர்கள் ஏ.லோகநாதன், என்.முருகேசன் ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் வி.வெங்கிடுசாமி நன்றி கூறினார். முகாமில் இணைச்செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் கே.பி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முகாமில் 84 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கண் அறுவைசிகிச்சை தேவைப்பட்ட 23 பேருக்கு உடுமலையிலும், 9 பேருக்கு கோவையிலும் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதுதவிர 19 பேருக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

0 comments: