Saturday, September 06, 2014
திருப்பூர் வருவாய் கோட்டாசியராக பணியாற்றி வந்த பழனிகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படத்தை தொடர்ந்து திருப்பூர் சப்-கலெ க்டராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான செந்தில்ரா ஜ் பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட் டை மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற, ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்ததும், முதன்முதலாக திருப்பூருக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர், கலெக்டர் ஜி.கோவிந்தராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் , சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சப்-கலெக்டர் செந்தில்ராஜை திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் கோட்டத்தில் பரம்ஜித் சிங் சித்து (1991 செப்., 30 - 1992 அக்., 5 வரை), ஹித்தேஸ் குமார் மக்வானா (1997 செப்., 1 - 1999 பிப்.,15 வரை), பங்கஜ் குமார் பன்சால் (1999 ஆக., 8 - 2000வது ஆண்டு அக்., 24 வரை) ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரிந்த பிறகு, மாவட்ட அளவில் முதல் சப்-கலெக்டராகவும், திருப்பூர் கோட்டத்தின் நான்காவது சப்-கலெக்டராக செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment