Saturday, September 06, 2014
திருப்பூர் வருவாய் கோட்டாசியராக பணியாற்றி வந்த பழனிகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படத்தை தொடர்ந்து திருப்பூர் சப்-கலெ க்டராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான செந்தில்ரா ஜ் பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட் டை மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற, ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்ததும், முதன்முதலாக திருப்பூருக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர், கலெக்டர் ஜி.கோவிந்தராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் , சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சப்-கலெக்டர் செந்தில்ராஜை திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் கோட்டத்தில் பரம்ஜித் சிங் சித்து (1991 செப்., 30 - 1992 அக்., 5 வரை), ஹித்தேஸ் குமார் மக்வானா (1997 செப்., 1 - 1999 பிப்.,15 வரை), பங்கஜ் குமார் பன்சால் (1999 ஆக., 8 - 2000வது ஆண்டு அக்., 24 வரை) ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரிந்த பிறகு, மாவட்ட அளவில் முதல் சப்-கலெக்டராகவும், திருப்பூர் கோட்டத்தின் நான்காவது சப்-கலெக்டராக செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment