Saturday, September 06, 2014
திருப்பூர் வருவாய் கோட்டாசியராக பணியாற்றி வந்த பழனிகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படத்தை தொடர்ந்து திருப்பூர் சப்-கலெ க்டராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான செந்தில்ரா ஜ் பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட் டை மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற, ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்ததும், முதன்முதலாக திருப்பூருக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். திருப்பூர் வந்த அவர், கலெக்டர் ஜி.கோவிந்தராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் , சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய சப்-கலெக்டர் செந்தில்ராஜை திருப்பூர் வடக்கு, தெற்கு, ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் கோட்டத்தில் பரம்ஜித் சிங் சித்து (1991 செப்., 30 - 1992 அக்., 5 வரை), ஹித்தேஸ் குமார் மக்வானா (1997 செப்., 1 - 1999 பிப்.,15 வரை), பங்கஜ் குமார் பன்சால் (1999 ஆக., 8 - 2000வது ஆண்டு அக்., 24 வரை) ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சப்-கலெக்டர்களாக இதுவரை பணியாற்றியுள்ளனர். கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் பிரிந்த பிறகு, மாவட்ட அளவில் முதல் சப்-கலெக்டராகவும், திருப்பூர் கோட்டத்தின் நான்காவது சப்-கலெக்டராக செந்தில்ராஜ் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment