Saturday, September 06, 2014
திருப்பூர் கோர்ட்டுகளுக்கு, புதிதாக நீதிபதிகள் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருந்த பத்மநாபன், மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலைக்கு மாறுதலாகி சென்றார்.அதனை தொடர்ந்து திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி சீனிவாசன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது அவர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி திலகம், திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேபோல், அவிநாசி உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி மாறுதல் செய்யப்பட்டு, இரண்டாண்டாக அப்பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment