Saturday, September 06, 2014
திருப்பூர் அருகே சாயபப்ட்டறையில் தேங்கிய கழிவு நீரால் குடிநீர் மாசுபட்டதால் சாய தொழிற்சாலைக்கு கலெக்டர் சீல் வைக்க உத்திரவிட்டார்.
திருப்பூர் வீரபாண்டி அருகே புதுத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சாயபட்டறை இயங்கி வருகிறது. அங்கு ஒரே வளாகத்தில் சாய தொழிற்சாலை மற்றும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் சாய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீரபாண்டி பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மட்டும் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள 2 சோலார் தளத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அந்த நீர் ஆவியாக்கப்பட்டு, கழிவுகள் அகற்றப்படுகிறது.
இந்த நிலையில் அந்த ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் சோலார் தளம் மட்டுமின்றி அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு பெரிய குழியில் தேங்கி இருந்துள்ளது. அங்கு நீண்ட நாட்களாக சாயம் கலந்த இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குடிநீரும் மாசுபட்டு, நிறம் மாறி இருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் அந்த சாய தொழிற்சாலையை திடீரென முற்றுகையிட்டனர். மேலும் இந்த கழிவுநீர் தேக்கத்தால் அந்த பகுதியை சுற்றி உள்ள மீனாம்பாறை, அவரப்பாளையம், ஏரித்தோட்டம், நொச்சிபாளையம் பகுதிலியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து தகவல்;அறிந்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உத்திரவின் பேரில், வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் நிகார் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் திருப்பூர் மாவட்ட வடக்கு உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தபட்ட ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள பெரிய குழியில் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறைகேடாக தேங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அவர் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் இருந்த பிரிண்டிங் எந்திரத்தில் 3 இடங்களில் சீல் வைத்தார். உடனடியாக அந்த கழிவுநீரை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றி பின்னர் அங்குள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, உடனே அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...


0 comments:
Post a Comment