Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by Anonymous in    
திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவர் ரூபி சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் கந்தசாமி, தமிழ் சங்கச் செயலாளர் ப.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இக்கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைத்தால், சாலை அகலப்படுத்தும் போது இடையூறு ஏற்படும். எனவே, மணிமண்டபம் அமைக்க வேறு இடம் ஒதுக்கித் தருவது குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் மாற்று இடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந் நிகழ்ச்சியில், மாநில கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் ப.கோபாலகிருஷ்ணன், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் சேமலையப்பன், கொங்கு கந்தசாமி, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: