Tuesday, September 30, 2014
திருப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த கணவருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி தங்கமணி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி தங்கமணி நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2013 அக்டோபர் 4-ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கமணியின் தோள்பட்டை, இடதுகையை தங்கராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பிறகு தங்கமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி வசந்தலீலா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தங்கமணியை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக தங்கராஜூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment