Tuesday, September 30, 2014
திருப்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த கணவருக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி தங்கமணி (38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவி தங்கமணி நடத்தையில் தங்கராஜூக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 2013 அக்டோபர் 4-ஆம் தேதி இரவு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்கமணியின் தோள்பட்டை, இடதுகையை தங்கராஜ் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன் பிறகு தங்கமணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கணவர் தங்கராஜை கைது செய்தனர். இதையடுத்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி வசந்தலீலா திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், தங்கமணியை கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக தங்கராஜூக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
0 comments:
Post a Comment