Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் பாசன சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூர் கழக செயலாளர் காஜாமொய்தீன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல் மெட்ராத்தி, காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

0 comments: