Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத்தன்று ராணி தனது மகன் அனுசாந்துடன் உடுமலை அருகே உள்ள கொள்ளுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் நேற்று ராணி தனது மகன் அனுசாந்துடன் ஊருக்கு புறப்பட்டு செல்ல பஸ்சுக்காக பொள்ளாச்சி–தாராபுரம் ரோட்டில் கொள்ளுப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் அனுசாந்த் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அனுசாந்தை சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் பொள்ளாச்சி, திவான்சார்புதூரை சேர்ந்த கருணாகரன் (45) என்பவரை கைது செய்தனர்.

0 comments: