Friday, September 05, 2014
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா அனுமந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களது மகன் அனுசாந்த் (வயது5). சம்பவத்தன்று ராணி தனது மகன் அனுசாந்துடன் உடுமலை அருகே உள்ள கொள்ளுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் நேற்று ராணி தனது மகன் அனுசாந்துடன் ஊருக்கு புறப்பட்டு செல்ல பஸ்சுக்காக பொள்ளாச்சி–தாராபுரம் ரோட்டில் கொள்ளுப்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் அனுசாந்த் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அனுசாந்தை சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் பொள்ளாச்சி, திவான்சார்புதூரை சேர்ந்த கருணாகரன் (45) என்பவரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
0 comments:
Post a Comment