Friday, September 05, 2014
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு ராக்கியகவுண்டன்புதூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 40–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் நேற்று காலை சமையலர் ஜெயம்மாள் (வயது 57) சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று சத்துணவு கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் சமையல் செய்து கொண்டிருந்த ஜெயம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சத்துணவு கூடத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது இதுகுறித்து மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கலைவாணி ஜோதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2–வது முறையாக இந்த சத்துணவு கூட மேற்கூரை நேற்று பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
–
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment