Friday, September 05, 2014
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு ராக்கியகவுண்டன்புதூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 40–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் நேற்று காலை சமையலர் ஜெயம்மாள் (வயது 57) சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று சத்துணவு கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் சமையல் செய்து கொண்டிருந்த ஜெயம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சத்துணவு கூடத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது இதுகுறித்து மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கலைவாணி ஜோதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2–வது முறையாக இந்த சத்துணவு கூட மேற்கூரை நேற்று பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
–
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment