Friday, September 05, 2014
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 18–வது வார்டு ராக்கியகவுண்டன்புதூர், மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 40–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் நேற்று காலை சமையலர் ஜெயம்மாள் (வயது 57) சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று சத்துணவு கூடத்தின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் சமையல் செய்து கொண்டிருந்த ஜெயம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சத்துணவு கூடத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதத்துக்கு முன்பு சமையல் செய்து கொண்டிருந்த பெண் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்து அவர் காயம் அடைந்தார். அப்போது இதுகுறித்து மன்ற கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கலைவாணி ஜோதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் 2–வது முறையாக இந்த சத்துணவு கூட மேற்கூரை நேற்று பெயர்ந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
–
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment