Friday, September 05, 2014
டெல்லியில் ஆட்சி அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதாவின் கூட்டணியான அகாலி தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தது. காங்கிரஸ் 8 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடமும் கிடைத்தன.காங்கிரஸ் ஆதரவுடன் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி 47 நாட்கள் மட்டுமே நீடித்தது. மாநிலத்தில் வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இதன்பின்பு, அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி எடுத்து வந்த தொடர் முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிலையில், 29 உறுப்பினர்களுடன் தனிபெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை டெல்லியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு, ஜனாதிபதியிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி ஆளுநர் பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உப்தாயா தெரிவித்துள்ளார். இதனிடையே பாரதீய ஜனதா அரைகுறையான அரசை உருவாக்க எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகவும், துணை நிலை ஆளுநர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ,பாரதீய ஜனதாவின் ஆணையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஸ்தோஷ் தெரிவித்துள்ளர்.
டெல்லியில் மறுதேர்தல் நடத்த கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசரணை வரும் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment