Friday, September 05, 2014
டெல்லியில் ஆட்சி அமைக்க கோரி பாரதீய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், பா.ஜனதா 31 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜனதாவின் கூட்டணியான அகாலி தளத்துக்கு ஒரு இடமும் கிடைத்தது. காங்கிரஸ் 8 இடங்களும், ஐக்கிய ஜனதாதளத்துக்கும், சுயேச்சைக்கும் தலா ஒரு இடமும் கிடைத்தன.காங்கிரஸ் ஆதரவுடன் முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி 47 நாட்கள் மட்டுமே நீடித்தது. மாநிலத்தில் வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்று கூறி கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இதன்பின்பு, அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி எடுத்து வந்த தொடர் முயற்சிகள் கைகூடவில்லை.
இந்த நிலையில், 29 உறுப்பினர்களுடன் தனிபெரும் கட்சியாக உள்ள பாரதீய ஜனதாவை டெல்லியில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கு, ஜனாதிபதியிடம் டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி ஆளுநர் பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, டெல்லியில் ஆட்சி அமைக்கும் நிலையில் நாங்கள் இருக்கிறோமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று டெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உப்தாயா தெரிவித்துள்ளார். இதனிடையே பாரதீய ஜனதா அரைகுறையான அரசை உருவாக்க எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாகவும், துணை நிலை ஆளுநர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் ,பாரதீய ஜனதாவின் ஆணையின் பேரில் துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஸ்தோஷ் தெரிவித்துள்ளர்.
டெல்லியில் மறுதேர்தல் நடத்த கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசரணை வரும் 9 ஆம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கு முன்னதாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment