Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு: திருப்பூர் மங்கலம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜா, 45. பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி தங்கமணி, 38. மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கராஜா அடிக்கடி மதுபோதையில் வந்து, மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்து வந்துள்ளார்.கடந்தாண்டு அக்., 4ம் தேதி இரவு, வழக்கம்போல் போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின், வீட்டிலிருந்த கத்தியால் மனைவியை சரமாரியாகத் தாக்கி, கொலை செய்ய முயன்றார். காயமடைந்த தங்கமணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜாரானார். இவ்வழக்கில் தங்கராஜாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

0 comments: